மோடிக்குபின் ரஜினி; ‘தலைவா’ என குறிப்பிட்ட பேர் கிரில்

மோடிக்குபின் ரஜினி; ‘தலைவா’ என குறிப்பிட்ட பேர் கிரில்

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல தனியார் தொலைக்காட்சி சாகச மனிதர் பேர் கிரில், ‘தலைவா’ என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

‘மேன் வெர்சஸ் வைல்டு’ சாகச நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இதற்கான படபிடிப்பு கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடிக்குப்பின் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முக்கியமான நபர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படத்துடன் பியர் கிரில்ஸ் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி புதிய சகாப்தத்தை படைக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த், மறக்க முடியாத அனுபவம் என தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில், இந்த சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி க்குப்பின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 2வது இந்தியர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்