ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி கனவாய் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு ஒரு கரடி தண்ணீர் தேடி வந்தது.
அந்த கரடி தேனி, மதுரை நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த சாலையில் வேகமாக ஒரு வாகனம் மோதியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட கரடி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரித்து வருகின்றது.