முந்திரி தோட்டத்துக்கு சென்ற கூலி தொழிலாளியை தாக்கிய கரடி.!

முந்திரி தோட்டத்துக்கு சென்ற கூலி தொழிலாளியை தாக்கிய கரடி.!

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், முந்திரி பழம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்த கரடி தேவசகாயம் மீது தாக்கியுள்ளது.

இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தப்பிபதற்காக கூச்சல் போட்டுள்ளார். இதனை கவனித்த மற்ற தொழிலாளிகள் ஓடி வந்து கரடியை விரட்டியடித்து தேவசகாயத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்