கங்குலி பொறுப்பேற்பு

  • In Sports
  • October 23, 2019
  • 195 Views
கங்குலி பொறுப்பேற்பு

மும்பை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார்.

கடந்த 14ம் தேதி நடந்த பிசிசி தலைவர் தேர்தலில், கங்குலியை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிசிசிஐஐ அலுவலகத்தில் சவுரவ் கங்குலி இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் கேப்டன் விராட் கோலியுடன் நாளை பேசுவேன். அவர் இந்தியாவின் கேப்டன். அவர் இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான மனிதர். சாத்தியமான எல்லா வழிகளிலும் நாங்கள் அவரை ஆதரிப்போம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்