புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார்.
இந்த சந்திப்பு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று சந்தித்து பேசினார்.