சென்னை:
அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்து தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை என்று மாநகராட்சி ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல இடங்களில் விதிகளை மீறி பேனர்கள் சென்னை நகரில் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பேனர் விவகாரத்தில் விதிகளை மாநகராட்சி மேலும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில், அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்து தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது.