சென்னை:
உயிர் பலி கொடுத்தால் தான் அரசு செயலபடும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த சட்ட விரோத பேனர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இதுதொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், லாரி டிரைவர், பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது.
விசாரணை நடத்திய நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உயிர் பலி கொடுத்தால் தான் அரசு செயல்படும் என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை வழக்கறிஞர், ஆளும் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் அறிக்கை அளித்துள்ளன. எதிர்காலத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.