சென்னை:
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் எங்கே? அவரும் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை போலீஸ் கைது செய்யவில்லை எனவும், விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் திமுக வாதிட்டு வருகிறது.