சென்னை:
பேனர் விவகாரம் தொடர்பாக நேற்று ஒசூரில் கைதான ஜெயகோபாலனுக்கு அக்டோபர் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயகோபாலன் கைதைத் தொடர்ந்து, மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜெயகோபாலுக்கு அக்டோபேர் 11ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில், பேனர், கொடி கட்டிய பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்மிகாந்த் ஆகியோர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.