சென்னை:
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில், ஜெயகோபால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 12ம் தேதி, பள்ளிகரணியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுகவை சேர்ந்த ஜெயகோபாலை இதுவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியது. மேலும், ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் போலீசார் கைது செய்யாமல் உள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக காவல்துறையினர் தேடிவந்த நிலையில், தற்போது ஜெயகோபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.