பேனர் வைத்தவர் மருத்துவமனையில் அனுமதி

  • In Chennai
  • September 14, 2019
  • 175 Views
பேனர் வைத்தவர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:

இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான, பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பமாக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, இ.பி.கோ.304(ஏ)- கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்