ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை!

ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை!

சென்னை:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில துணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை தக்கவைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்