சென்னை:
சென்னை புழல் மத்திய சிறையில் பன்னா இஸ்மாயிலுக்கும், எஸ்.பி.,க்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையில் நேற்று நடந்த கைதிகள் குறைதீர் கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, காரணம் கேட்கச்சென்ற சிறைத்துறை எஸ்.பி.,யிடம் பன்னா இஸ்மாயில் வாக்குவாதம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில், பன்னா இஸ்மாயில் தன்னை தாக்கியதாக சிறைத்துறை எஸ்.பி., செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.