கேஸ் கட்டரில் தீ; கொள்ளையர்கள் ஓட்டம்

கேஸ் கட்டரில் தீ; கொள்ளையர்கள் ஓட்டம்

ஒசூர்:

ஒசூர் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயற்சித்தபோது, கேஸ் கட்டரில் தீப்பிடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த அஞ்செட்டியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கொள்ளையிட நள்ளிரவில் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். வங்கியின் பின்புறமாக உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைவதற்காக கடப்பாறை, கேஸ் கட்டர் ஆகியவற்றுடன் நுழைந்த அந்த கொள்ளை கும்பல், சத்தம் வராமல் இருப்பதற்காக கேஸ் கட்டரின £ல் ஜன்னலை துண்டிக்க முயன்றது.

அப்போது, வங்கியின் உள்பகுதியில் ஜன்னலில் மட்டப்பட்டிருந்த கேலண்டர் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது, அந்த தீயானது கேஸ் வெல்டர் பகுதியிலும் பற்றி எரிய தொடங்கியதால், கேஸ் சிலிண்டர் வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் கொள்ளை கும்பல் கேஸ் கட்டர், சிலிண்டர், கடப்பாரை உள்ளிட்டவைகளை ஆங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

வங்கியில் மர்ம நபர்களின் கொள்ளை முயற்சி குறித்து அஞ்செட்டி போலீசார் விச £ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்