பெங்களூருவில் கட்டிடம் சரிந்து விபத்து!

பெங்களூருவில் கட்டிடம் சரிந்து விபத்து!

பெங்களூரு:

பெங்களூருவில் புதிய கட்டிடம் சரிந்து விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில் 8 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் பெங்களூரு புலிகேசி நகரில் புதிய கட்டடம் கட்டுமானம் நடைபெற்று வந்தது. இந்த கட்டிடம் இன்று காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புபணியில் இறங்கியுள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் வரி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவரின் சடலத்தை மீட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்டு பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மருத்துவக் குழுவும் ஏற்கனவே சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்