மதுரை:
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது பற்றி நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிரஞ்சீவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில், ஜுன் 25 அன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த சட்டத்தினை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த செயலை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறை படுத்தியது.
ஆனால் சில நாட்களுக்கு மட்டுமே பிளாஸ்டிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஆனால் பிளாஸ்டிக் பயன்பாடு நாளடைவில் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கை பொருட்கள் நலிவடைய தொடங்கியது.
இந்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இழந்து கடனாளிகள் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அரமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இது பற்றி தமிழக உள்துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், அராணை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது பற்றி நிலை அறிக்கையை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
விரைவில் அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.