சென்னை:
வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொண்டர்கள் தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள கட்சி நிதியாக ரூ.100 செலுத்த வேண்டும் எனவும், சால்வை அணிவிக்க கூடாது எனவும் வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது போக்குவரத்து தடை, தீ விபத்து மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால், வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மதிமுக விளக்கம் அளித்துள்ளது.