ஒசூரில் 2000 ஓட்டுநர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உதவி

ஒசூரில் 2000 ஓட்டுநர்களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உதவி

ஒசூரில் அதிமுக சார்பில் 2000 ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை வழங்கினார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒசூர் பகுதிகளில் ஏழை எளியோருக்கு தொடர்ந்து பல்வேற உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒசூரில் உள்ள அம்மா உணவகங்களில் தொடரந்து மூன்று வேளை உணவு வழங்கும் செலவினை ஏற்றுள்ள நிலையில்

ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக வருவாயின்றி தவிக்கும் ஆட்டோ, தனியார் பேருந்து, டெம்போ ஆகிய வாகனங்களை இயக்கும் 2000 ஓட்டுநர் குடும்பங்களுக்கு அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பையும், காரட், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் தொகுப்பையும் வழங்கினார்.

இதனை ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பெற்று சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ராமு, ஜெகதீஸ்,ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி,விஜயாலையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்