மதுரை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தலைமறைவாகியுள்ள மாணவர் உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உதித் சூர்யாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், நீட் ஆள்மாறாட்ட விசாரணைக்காக உதித் சூர்யா சிபிசிஐடியிடம் சரணடைய வேண்டும் எனவும், உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மேலும், சிபிசிஐடி கைது செய்தால் முன்ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக விசாரிக்க தயார் எனவும், உதித் சூர்யாவுக்கு போலீஸ் காவல் வழங்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.