பாத்திரத்தில் தலை சிக்கிய குழந்தை

பாத்திரத்தில் தலை சிக்கிய குழந்தை

எர்ணாகுளம்:

கேரளாவில் ஈய பாத்திரத்தில் தலை சிக்கிய குழந்தையை பெரும் போராட்டத்துக்குபின் தீயணைப்பு வீரர்கள் மீட்டெடுத்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் சேர்ந்தவர் ஆபிரஹாம். இவரின் 3 வயது சிறுவனான பியான், வழக்கம்போல் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஈய பாத்திரத்தை தலையில் கவிழ்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஈயப் பாத்திரம் தலையில் சிக்கிக்கொண்டது.

அந்த பாத்திரத்தை வெளியே எடுக்கமுடியாமல், சிறுவனின் கூக்குரல் கேட்கவே பெற்றோர் ஓடிவந்து எடுக்க முயன்றனர். ஆனால் அதனை எடுக்க முடியவில்லை.

உடனடியாக தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு சிறுவனை அழைத்து சென்று, வீரர்கள் உதவியுடன் அந்த பானையை வெட்டி எடுத்தனர். இதில் சிறுவனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்