ஒசூரில் 200 பெண்களுக்கு வளைகாப்பு

ஒசூரில் 200 பெண்களுக்கு வளைகாப்பு

ஒசூர்:

ஓசூரில் சமூக நலத்துறை சார்பில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்திலுள்ள 200க்கும் மேற்ப்பட்ட 7 முதல் 9 மாத கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா தலைமையில் நடைப்பெற்றது.

தமிழகம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக ஒன்றியங்கள் தோறும் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஓசூரில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளரவும், எந்த விதமான உணவு வகைகளை பெண்கள் உட்கொள்ள வேண்டும் என ஒன்றிய மருத்துவ அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்