ஓசூர் அருகே குட்டியானை பலி

ஓசூர் அருகே குட்டியானை பலி

ஒசூர்:

ஒசூர் அருகே 8 மாத குட்டி யானை பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உத்தனப்பள்ளி பக்கம் உள்ள சானமாவு காட்டிலிருந்து எட்டு மாத குட்டி யானை தாயிடமிருந்து பிரிந்து ஊருக்குள் வந்தது. மயக்க ஊசி போட்டு பிடி க்கப்பட்ட இந்த யானையை தாயிடம் சேர்ப்பதற்காக வனத்துறையினர் முயன்றனர்.
ஆனாலும் இந்த யானை தாயுடன் சேராமல் கிராம பகுதியில் சுற்றி வந்தது . இந்த நிலையில் சேற்று நீரை குடித்து இந்த குட்டி யானை இறந்து விட்டது. இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது வனத்துறையினர் யாருக்கும் தெரியாமல் கச்சிதமாக அடக்கம் செய்து முடித்துவிட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்