புதுடெல்லி:
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழுவின் முயற்சி தோல்வியடைந்ததாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்ற அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், மூன்று பேர் கொண்ட சமரசக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கும் ஆகஸ்ட் 6 முதல் தினமும் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.