புதுடெல்லி:
அயோத்தி வழக்கில் அக்டோபர் 18ம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி நிலப்பிரச்சனை வழக்கு 32வது நாளாக உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் எனவும், அக்டோபர் 18ம் தேதிக்கு பிறகு ஒருநாள்கூட வாதத்திற்கு அவகாசம் தர முடியாது – விசாரணையில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.