அயோத்தி நில வழக்கு: சமரசக்குழு அறிக்கை தாக்கல்

அயோத்தி நில வழக்கு: சமரசக்குழு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி:

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய மூவர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 8ம் தேதி உச்சநீதிமன்றம் நடத்திய விசாரணையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட சமரச குழுவை அமைத்தது.

இந்த சமரசக்குழுவில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த மூவர் குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடமும் ஆலோசனை நடத்தி ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மூவர் குழு சீலிடப்பட்ட உறையில் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்