சென்னை:
நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த முதியோர், சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை வழங்குகிறார். இதற்காக இன்றே அந்த தம்பதியினர் சென்னை வந்துள்ளனர்.