நீலகிரி:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபடியான மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்கிறது.
இதனால் அவலாஞ்சியில் மழையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் மட்டும் 45 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால் அவலாஞ்சியில் பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.