மும்பை:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிராஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதியது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை எடுத்தது.
இதனைத்தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை குவித்து அமோக வெற்றிபெற்றது.
இந்த போட்டியில், 112 பந்துகளில் 128 ரன்களை குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.