பிரிஸ்பேன்:
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இலங்கை அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான டி20 போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்து அபார வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.