ஆஸ்திரேலியாவில் பயங்கர தீ

  • In General
  • November 9, 2019
  • 172 Views
ஆஸ்திரேலியாவில் பயங்கர தீ

கான்பெர்ரா:

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலர் காணாமல் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வறட்சி மிகுந்த கிழக்கு கடற்கரை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல் சென்றனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்தால் குயின்லாந்து மாநில எல்லைப்பகுதியில் 500 கிலோமீட்டர் கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களை வீடுகளை காலிசெய்துள்ளனர்.

இந்த காட்டுத்தீயை அணைக்க, நியூசவுத் வேல்ஸ் முழுவதும் சுமார் 1,500 தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்