அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் தனியார் ஏடிஎம் மெஷினில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில், ரூ.7 லட்சம் சாம்பலானது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மதுரை மெயின் ரோடில், எச்டிஎஃப்சி வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு மீட்டு குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், அதில் வைத்திருந்த பணம் எவ்வளவு என்பது அதிகாரிகள் வந்த பிறகுதான் தெரியவந்தது. இதில், ரூ.7 லட்சம் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.