அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி

அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் அத்திவரதர் சயன (படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் வெள்ளத்தால் காஞ்சிபுரம் நகரமே கடல் போன்று காட்சி அளித்தது.
31வது நாளான நேற்று அத்திவரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளித்தது நேற்றுடன் நிறைவடைந்தது.

அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் இதுவரை தரிசனம் செய்யாத பக்தர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோணத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்