சேலம்:
சேலம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமையாசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
சேலம் மாவட்டம் காக்காபாளையம் அரசு மேல்நிலையப்பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவியை, அப்பள்ளி உதவி தலைமையாசிரியர் பாலாஜி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின்பேரில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி, தலைமறைவானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.