சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கயில், ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.