தங்கை முறை காதல்; பஞ்., தர்ம அடி

தங்கை முறை காதல்; பஞ்., தர்ம அடி

அனந்தபுரம்:

ஆந்திராவில் காதலர்கள் வீட்டை விட்டு ஓடியவர்களுக்கு ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டம், கே.பி.தொட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 19 வயது சாயி ஆகியோர் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதம் கிடைக்காததால், சில நாட்களுக்கு முன் ஊரை விட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில், தங்கை முறை காதலான இவர்களை பெற்றோர்கள் தேடி பிடித்து இழுத்துவந்து பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். அப்போது பெற்றோர்கள் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இவர்களை சமாதானம் செய்த பஞ்சாயத்தார், இருவரையும் அவர்களுடைய பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்