அஸாமில் மோதல் பதற்றம்; போலீசார் துப்பாக்கிசூடு!

அஸாமில் மோதல் பதற்றம்; போலீசார்  துப்பாக்கிசூடு!

ஹைலகாண்டி:

அஸாம் மாநிலம், ஹைலகாண்டி நகரில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 15 பேர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் ஒரு மணியளவில், தொழுகை நடத்த, காளி பாயின்ட் பகுதி மசூதி அருகே ஒரு பிரிவினர் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

உடனடியாக அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்