கவுகாத்தி:
அஸாம் மாநிலம் கவுகாத்தி நகரின், மிருககாட்சி சாலையில் வணிக வளாகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
வணிகவளாகம் அருகே இன்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் 6 பேரையும் கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த கவுகாத்தி போலீஸ் கமிஷனர் தீபக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.