போலீஸ் ஸ்டேஷன் முன் பிளேடால் கழுத்து அறுப்பு!

போலீஸ் ஸ்டேஷன் முன் பிளேடால் கழுத்து அறுப்பு!

சென்னை:

சென்னையில் காவல் நிலையம் முன்னே கூலித்தொழிலாளி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி. இவர் மீது சில பழைய வழக்குகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த வழக்குகளில் தன்னை அழைத்து போலீசார் கொடுமைபடுத்தியதாகவும், தனது மனைவி சுமித்ரா தன்னுடன் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கார்த்திக் தெரிவித்தார்.

மேலும், தன்னையும் தனது மனைவியையும் போலீசார் பிரிப்பதாகக் கூறி நேற்று இரவு கார்த்திக் அசோக் நகர் காவல் நிலையம் முன் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டார். உடனடியாக கார்த்திக்கை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்