பாங்காக்:
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஸ்குமார் தங்கம் வென்றுள்ளார்.
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஆஷிஸ் குமார் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் கிம் ஜின்ஜேவை வீழ்த்தி தனது முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த தொடரில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.