புதுடெல்லி:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று காலமானார்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி, கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அருண்ஜெட்லி இன்று பகல் 12.07 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.