‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி

‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி

ஒசூர்:

ஒசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான ‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான‘ஆர்ட் ஆப் பேரன்டிங்’ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் லயன் மு.எம்ஜியார் அவர்கள் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

விழாவில் தன்னிம்பிக்கை பேச்சாளர் ரேகா பத்மநாபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ‘நல்ல மாணவர்களை உருவாக்குவதில் மற்றும் வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு’, ‘பெற்றோர் மனபாங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ஒசூர் விஜய் வித்யாலயா பள்ளியின் முதல்வர் முனைவர் கி. சம்பத்குமார் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் நிர்வாகிகள் பத்மானந்தன், உதயகுமார், சுகுமார், சுசிலா எம்ஜியார், சமூக சேவகர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பள்ளியின் முதல்வர் மேரி ஜேக்கப் வரவேற்புறையாற்றினார். நிகழ்ச்சியில் பெருந்திரளான பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்