இந்தூர்:
மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டிய பா.ஜ., எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்பு பணியில் மாநகராட்சி ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எம்எல்ஏவும், பா.ஜ., மூத்த தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனுமான ஆகாஷ் விஜய்வர்கியா, அந்த அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கி விரட்டி அடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்க்கியா கைது செய்யப்பட்டுள்ளார்.
#WATCH BJP MLA Akash Vijayvargiya (son of senior BJP leader Kailash Vijayvargiya) being taken to court, after he was arrested for thrashing a Municipal Corporation employee in #Indore. #MadhyaPradesh pic.twitter.com/RxWsHGDPrN
— ANI (@ANI) June 26, 2019