தேர்த்திருவிழாவில் 2 பேர் பலியான சம்பவத்தில் பாதிரியார் கைது..!

தேர்த்திருவிழாவில் 2 பேர் பலியான சம்பவத்தில் பாதிரியார் கைது..!

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமத்தில் லூர்துமாதா கோவிலின் ஆண்டுத் திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவையொட்டி, லூர்துமாதாவை அலங்கரிக்கப்பட்ட தேரை மாட்டுவண்டியில் கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.

இந்நிலையில், தேரின் உச்சியிலிருந்த சிலுவை மின்கம்பத்தில் உரசியதால், தேரை இழுத்துச்சென்ற ஜெபராஜ், அன்பரசு ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில், உரிய பாதுகாப்பு இல்லாமல் தேர் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாதிரியார் ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்