வேலூர்:
காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை குறிப்பிட்டு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
காந்தியின் 100வது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர் 150வது பிறந்த நாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா? எனது பிள்ளை வீடு திரும்புவானா? என்று அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.