அமித்ஷாவை சந்தித்த அற்புதம்மாள்

அமித்ஷாவை சந்தித்த அற்புதம்மாள்

புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 7 பேரின் விடுதலை குறித்து அற்புதம்மாள் மனு கொடுத்தார்.

இதுகுறித்து அற்புதம்மாள் கூறுகையில், 28 ஆண்டுகள் விடுதலைக்காக நாங்கள் போராடி வருகிறோம். ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புகிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தனர். உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன் என தெரிவித்தார்.

உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் உடன் சென்றிருந்தார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்