பாட்னா:
பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகளின் பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மருத்துவமனைகளில் சுமார் 400 குழந்தைகளள் ஏஇஎஸ் வைரஸ் பாதிப்பினால் மூளைக்காய்ச்சல் நோயால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்டவை தான் இந்த ஏஇஎஸ் நோய் பாதிப்பு ஆகும். இது அதிக வெப்பம் மழையின்மை காரணமாக சர்க்கரையின் அளவு உடலில் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்குமுன் 83 குழந்தைகள் இறந்த நிலையில் தற்போது வரை 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.