புதுடெல்லி:
சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.
இந்த விழாவில், தமிழகத்தை சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதும், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.