சென்னை:
இந்திமொழி பேசாத மாநிலங்களில், 8ம் வகப்பு வரை இந்தி கட்டாயம் என தேசிய கல்விக்கொள்ளை வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசால் வரைவு அறிக்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ‘‘அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல; திருத்தப்பட்டது வரைவு’’ என பதிவிட்டிருந்தார்.