போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

  • In Chennai
  • September 30, 2019
  • 201 Views
போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த 3 குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த ஹரி (எ) அறிவழகன் என்பவரை கடந்த 19ம் தேதி அன்று இரவு ஹரி வீட்டிலிருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கத்தியால் சரமரியாக தாக்கியதில் சம்பவயிடத்திலே இறந்து விட்டார்.

இது குறித்து ஹரியின் தாய் லட்சுமி அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, தனிப்படை அமைத்து கொலை வழக்கில் வினோத், பாலாஜி, மற்றும் சத்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த எழும்பூர் சரக உதவி ஆணையாளர் சுப்பிரமணி, அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்குமார், திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தாஸ், அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் அருணாச்சலராஜா, அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பிரசித்தீபா, திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மருது, திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவியரசு, காவலர் ரவிபிரகாஷ், ஆயுதப்படை காவலர் மதன் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் விசுவநாதன் இன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்