சென்னை:
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது.
இதனையடுத்து, இன்று காலை, அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு சென்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டார்.
மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரிதும் பயனளிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்காமல், இனியாவது தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திடவும், படிக்க வரும் மாணவ-மாணவியர்கள் குறைகளை களைந்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் வலியுறுத்தின